85. அல் புரூஜ் - குர்ஆன்
- 1. கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
- 2. இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
- 3. மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
- 4. (நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர்.
- 5. விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).
- 6. அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,
- 7. முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
- 8. (யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.
- 9. வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.