HARUN YAHYA
Tamil / தமிழ்
TA
பகிர்
1. அல் பாத்திஹா
2. அல் பகரா
3. ஆலு இம்ரான்
4. அன்னிஸா
5. அல் மாயிதா
6. அல் அன்ஆம்
7. அல் அஃராப்
8. அல் அன்ஃபால்
9. அத்தவ்பா
10. யூனுஸ்
11. ஹூது
12. யூஸுஃப்
13. அர் ரஃது
14. இப்ராஹீம்
15. அல் ஹிஜ்ர்
16. அந் நஹ்ல்
17. பனீ இஸ்ராயீல்
18. அல் கஹ்ஃபு
19. மர்யம்
20. தாஹா
21. அல் அன்பியா
22. அல் ஹஜ்
23. அல் முஃமினூன்
24. அந் நூர்
25. அல் ஃபுர்கான்
26. அஷ்ஷுஅரா
27. அந் நம்ல்
28. அல் கஸஸ்
29. அல் அன்கபூத்
30. அர் ரூம்
31. லுக்மான்
32. அஸ் ஸஜ்தா
33. அல் அஹ்ஸாப்
34. ஸபா
35. ஃபாத்திர்
36. யாஸீன்
37. அஸ் ஸாஃப்பாத்
38. ஸாத்
39. அஸ்ஸுமர்
40. அல் முஃமின்
41. ஃபுஸ்ஸிலத்
42. அஷ்ஷூரா
43. அஸ்ஸுக்ருஃப்
44. அத் துகான்
45. அல் ஜாஸியா
46. அல் அஹ்காஃப்
47. முஹம்மத்
48. அல் ஃபத்ஹ்
49. அல் ஹுஜ்ராத்
50. காஃப்
51. அத் தாரியாத்
52. அத் தூர்
53. அந்நஜ்ம்
54. அல் கமர்
55. அர் ரஹ்மான்
56. அல் வாகிஆ
57. அல் ஹதீத்
58. அல் முஜாதலா
59. அல் ஹஷ்ர்
60. அல் மும்தஹினா
61. அஸ் ஸஃப்
62. அல் ஜும்ஆ
63. அல் முனாஃபிகூன்
64. அத்தகாபுன்
65. அத்தலாக்
66. அத்தஹ்ரீம்
67. அல் முல்க்
68. அல் கலம்
69. அல் ஹாக்கா
70. அல் மஆரிஜ்
71. நூஹ்
72. அல் ஜின்
73. அல் முஸ்ஸம்மில்
74. அல்முத்தஸிர்
75. அல்கியாமா
76. அத் தஹ்ர்
77. அல் முர்ஸலாத்
78. அந் நபா
79. அந்நாஸிஆத்
80. அபஸ
81. அத் தக்வீர்
82. அல் இன்ஃபிதார்
83. அல் முதஃப்பிபீன்
84. அல் இன்ஷிகாக்
85. அல் புரூஜ்
86. அத்தாரிக்
87. அல் அஃலா
88. அல் காஷியா
89. அல் ஃபஜ்ரி
90. அல்பலது
91. அஷ் ஷம்ஸ்
92. அல் லைல்
93. அல்லுஹா
94. அஷ்ஷரஹ்
95. அத் தீன்
96. அல் அலக்
97. அல் கத்ர்
98. அல் பய்யினா
99. அஸ்ஸில்ஸால்
100. அல் ஆதியாத்
101. அல்காரிஆ
102. அத் தகாஸுர்
103. அல் அஸ்ர்
104. அல் ஹுமஸா
105. அல் ஃபீல்
106. குறைஷ்
107. அல் மாஊன்
108. அல் கவ்ஸர்
109. அல் காஃபிரூன்
110. அந் நஸ்ர்
111. தப்பத்
112. அல் இஃக்லாஸ்
113. அல் ஃபலக்
114. அந் நாஸ்
குர்ஆன்
அபஸ
1. அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
2. அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
3. (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
4. அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.
5. (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
6. நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
7. ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
8. ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
9. அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
10. அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
11. அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
12. எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
13. (அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
14. உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.
15. (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
16. (லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
17. (நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
18. எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
19. (ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
20. பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
21. பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்` ஆக்குகிறான்.
22. பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
23. (இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
24. எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
25. நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
26. பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
27. பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
28. திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
29. ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
30. அடர்ந்த தோட்டங்களையும்,
31. பழங்களையும், தீவனங்களையும்-
32. (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
33. ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
34. அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
35. தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
36. தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
37. அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
38. அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
39. சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
40. ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
41. அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
42. அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.