logo HARUN YAHYA

அல் கலம் - குர்ஆன் - ஹருன் யஹ்யா

  • 1. நூன், எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!
  • 2. உம்முடைய இறைவன் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர்.
  • 3. இன்னும், உமக்குக் குறைவே இல்லாத நற்கூலி நிச்சயமாக இருக்கிறது.
  • 4. மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
  • 5. எனவே, வெகு சீக்கிரத்தில் நீரும் பார்ப்பீர்; அவர்களும் பார்ப்பார்கள்.
  • 6. உங்களில் எவர் (பைத்தியமென்னும் நோயால்) சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்பதை.
  • 7. உம்முடைய இறைவன் அவனுடைய வழியை விட்டுத் தவறியவர்கள் யார் என்பதை நிச்சயமாக நன்கறிவான்; (அது போன்றே) நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கறிவான்.
  • 8. எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர்.
  • 9. (சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
  • 10. அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்;
  • 11. (அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்.
  • 12. (எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன், வரம்பு மீறிய பெரும் பாவி.
  • 13. கடின சித்தமுடையவன், அப்பால் இழி பிறப்புமுடையவன்.
  • 14. பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால்
  • 15. நம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், "இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள்" என்று அவன் கூறுகின்றான்.
  • 16. விரைவிலேயே அவனுடைய மூக்கின் மீது அடையாளமிடுவோம்.
  • 17. நிச்சயமாக நாம் தோட்டமுடையவர்களைச் சோதித்தது போலவே, நாம் அவர்களைச் சோதித்தோம். அ(த் தோட்; டத்திற்குடைய)வர்கள் அதிலுள்ள கனிகளை அதிகாலையில் சென்று பறித்து விடுவோமென்று சத்தியம் செய்தார்கள்.
  • 18. அல்லாஹ் நாடினால் என்று அவர்கள் கூறவில்லை,
  • 19. எனவே, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது உம் இறைவனிடமிருந்து சுற்றக் கூடிய (நெருப்பின் ஆபத்)து சுற்றி(த் தோட்டத்தை) அழித்து விட்டது.
  • 20. (நெருப்புக் கரித்து விட்ட படியால் அத்தோட்டம்) காலையில் கருத்த சாம்பலைப் போல் ஆயிருந்தது.
  • 21. (இது அறியாது) காலையில் எழுந்த அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்தனர்.
  • 22. "நீங்கள் (விளைந்த) கனிகளைக் கொய்பவர்களாக இருந்தால் உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் செல்லுங்கள்" (என்று கூறிக் கொண்டனர்).
  • 23. எனவே அவர்கள் (பிறர் அறியாது) மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர்,
  • 24. "எந்த ஏழை எளியவரும் இன்று உங்களிடம் அ(த் தோட்டத்)தில் நிச்சயமாக பிரவேசிக்கக் கூடாது" (என்று).
  • 25. உறுதியுடன் சக்தியுடையவர்களாக காலையில் சென்றனர்.
  • 26. ஆனால், அவர்கள் அதை (தோட்டத்தை அழிந்து போன நிலையில்) கண்ட போது: "நிச்சயமாக நாம் வழி தவறி (வேறு தோட்டத்திற்கு) வந்து விட்டோம்" என்று கூறினார்கள்.
  • 27. (பின்னர் கவனித்துப் பார்த்துவிட்டு) "இல்லை! (ஏழை எளியோர்க்கு எதுவும் கிடைக்காமற் செய்து) நாம் தாம் பாக்கியம் இழந்தவர்களாக ஆகிவிட்டோம்" (என்றும் கூறிக்கொண்டனர்.)
  • 28. அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் "நீங்கள் தஸ்பீஹு செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?" என்று கூறினார்.
  • 29. "எங்கள் இறைவன் தூயவன், நாம் தாம் நிச்சமயாக அநியாயம் செய்தவர்கள் ஆகிவிட்டோம்" என்றும் கூறினர்.
  • 30. பின்னர், அவர்களில் சிலர் சிலரை நிந்தித்தவர்களாக முன்னோகினர்.
  • 31. அவர்கள் கூறினார்கள்: "எங்களுக்குண்டான கேடே! நிச்சயமாக நாம் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்.
  • 32. "எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும், நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்" (எனக் கூறினர்).
  • 33. இவ்வாறுதான் (இவ்வுலக) வேதனை வருகிறது, அவர்கள் அறிந்து கொள்வார்களானால் மறுமையின் வேதனை (இதைவிட) மிகவும் பெரிது (என உணர்ந்து சன்மார்க்கத்தின் பால் திரும்புவார்கள்).
  • 34. நிச்சயமாக, பயபக்தியுடையோருக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் (பாக்கியமுடைய) சுவனச் சோலைகள் உண்டு.
  • 35. நாம் முஸ்லிம்களை, (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?
  • 36. (சத்தியத்தை நிராகரிப்போரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இரு சாராரும் சமமென) எவ்வாறு நீங்கள் தீர்ப்புச் செய்கிறீர்கள்?
  • 37. அல்லது உங்களிடம் ஏதாவது வேத(ஆதார)ம் இருக்கின்றதா? அதில் நீங்கள் படித்திருக்கின்றீர்களா?
  • 38. நிச்சயமாக நீங்கள் உங்களுக்காகத் தெரிந்தெடுத்துக் கொள்வதுவே (சரி) என்று அதில் இருக்கின்றதா,
  • 39. அல்லது, நீங்கள் தீர்ப்புச் செய்து கொள்வதெல்லாம் கியாம நாள் வரை உங்களுக்கு நிச்சயமாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் என்று நம் உறுதி பிரமாணங்கள் உங்களிடம் இருக்கின்றனவா?
  • 40. (அவ்வாறெனில்) அவர்களில் எவர் அதற்குப் பொறுப்பேற்பவர் என்பதை (நபியே!) நீர் அவர்களிடம் கேட்பீராக.
  • 41. அல்லது (பொறுப்பேற்க) அவர்களுக்கு இணை வைக்கும் கூட்டாளிகள் தாம் இருக்கின்றார்களா? அவ்வாறாயின், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களுடைய கூட்டாளிகளைக் கொண்டு வரட்டும்.
  • 42. கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள்.
  • 43. அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும்நிலையில் இழிவு அவர்களை மூடிக் கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்த போது, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தனர். (ஆனால் அப்போது அலட்சியமாக இருந்தனர்.)
  • 44. எனவே, என்னையும், இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டு விடுவீராக! அவர்களே அறியாத விதத்தில் படிப்படியாகப் பிடிப்போம்.
  • 45. அன்றியும், நான் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பேன், நிச்சயமாக என் திட்டமே உறுதியானது.
  • 46. நீர் அவர்களிடம் ஏதாவது கூலிகேட்டு, அதனால் அவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டு விட்டதா?
  • 47. அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் ஏடு) அவர்களிடம் இருந்து (அதில்) அவர்கள் எழுதுகின்றார்களா?
  • 48. ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக, மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம், அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது:
  • 49. அவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார்.
  • 50. ஆனால், அவருடைய இறைவன், அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை ஸாலிஹானவர்களில் - நல்லவர்களில் நின்றும் ஆக்கினான்.
  • 51. மேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை) கேட்கும் போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்; "நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்" என்றும் கூறுகின்றனர்.
  • 52. ஆனால் அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசயேன்றி வேறில்லை.
பகிர்
Facebook
X
WhatsApp
Telegram
QR Code
QR Code
1 அல் பாத்திஹா
2 அல் பகரா
3 ஆலு இம்ரான்
4 அன்னிஸா
5 அல் மாயிதா
6 அல் அன்ஆம்
7 அல் அஃராப்
8 அல் அன்ஃபால்
9 அத்தவ்பா
10 யூனுஸ்
11 ஹூது
12 யூஸுஃப்
13 அர் ரஃது
14 இப்ராஹீம்
15 அல் ஹிஜ்ர்
16 அந் நஹ்ல்
17 பனீ இஸ்ராயீல்
18 அல் கஹ்ஃபு
19 மர்யம்
20 தாஹா
21 அல் அன்பியா
22 அல் ஹஜ்
23 அல் முஃமினூன்
24 அந் நூர்
25 அல் ஃபுர்கான்
26 அஷ்ஷுஅரா
27 அந் நம்ல்
28 அல் கஸஸ்
29 அல் அன்கபூத்
30 அர் ரூம்
31 லுக்மான்
32 அஸ் ஸஜ்தா
33 அல் அஹ்ஸாப்
34 ஸபா
35 ஃபாத்திர்
36 யாஸீன்
37 அஸ் ஸாஃப்பாத்
38 ஸாத்
39 அஸ்ஸுமர்
40 அல் முஃமின்
41 ஃபுஸ்ஸிலத்
42 அஷ்ஷூரா
43 அஸ்ஸுக்ருஃப்
44 அத் துகான்
45 அல் ஜாஸியா
46 அல் அஹ்காஃப்
47 முஹம்மத்
48 அல் ஃபத்ஹ்
49 அல் ஹுஜ்ராத்
50 காஃப்
51 அத் தாரியாத்
52 அத் தூர்
53 அந்நஜ்ம்
54 அல் கமர்
55 அர் ரஹ்மான்
56 அல் வாகிஆ
57 அல் ஹதீத்
58 அல் முஜாதலா
59 அல் ஹஷ்ர்
60 அல் மும்தஹினா
61 அஸ் ஸஃப்
62 அல் ஜும்ஆ
63 அல் முனாஃபிகூன்
64 அத்தகாபுன்
65 அத்தலாக்
66 அத்தஹ்ரீம்
67 அல் முல்க்
68 அல் கலம்
69 அல் ஹாக்கா
70 அல் மஆரிஜ்
71 நூஹ்
72 அல் ஜின்
73 அல் முஸ்ஸம்மில்
74 அல்முத்தஸிர்
75 அல்கியாமா
76 அத் தஹ்ர்
77 அல் முர்ஸலாத்
78 அந் நபா
79 அந்நாஸிஆத்
80 அபஸ
81 அத் தக்வீர்
82 அல் இன்ஃபிதார்
83 அல் முதஃப்பிபீன்
84 அல் இன்ஷிகாக்
85 அல் புரூஜ்
86 அத்தாரிக்
87 அல் அஃலா
88 அல் காஷியா
89 அல் ஃபஜ்ரி
90 அல்பலது
91 அஷ் ஷம்ஸ்
92 அல் லைல்
93 அல்லுஹா
94 அஷ்ஷரஹ்
95 அத் தீன்
96 அல் அலக்
97 அல் கத்ர்
98 அல் பய்யினா
99 அஸ்ஸில்ஸால்
100 அல் ஆதியாத்
101 அல்காரிஆ
102 அத் தகாஸுர்
103 அல் அஸ்ர்
104 அல் ஹுமஸா
105 அல் ஃபீல்
106 குறைஷ்
107 அல் மாஊன்
108 அல் கவ்ஸர்
109 அல் காஃபிரூன்
110 அந் நஸ்ர்
111 தப்பத்
112 அல் இஃக்லாஸ்
113 அல் ஃபலக்
114 அந் நாஸ்