90. அல்பலது - குர்ஆன்
- 1. இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
- 2. நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
- 3. பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
- 4. திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
- 5. `ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்` என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
- 6. "ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான்.
- 7. தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
- 8. அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?
- 9. மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?