96. அல் அலக் - குர்ஆன்
- 1. (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
- 2. `அலக்` என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
- 3. ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
- 4. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
- 5. மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
- 6. எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
- 7. அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
- 8. நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
- 9. தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
- 10. ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
- 11. நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
- 12. அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
- 13. அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,
- 14. நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
- 15. அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
- 16. தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
- 17. ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
- 18. நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
- 19. (அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.